பிளாஸ்டிக் காகிதத்தின் உதவியுடன் மின்சக்தியை சேமித்து வைக்கலாம்

சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஸிங்கோபிங் பல்கலைகழகத்தினர், பிளாஸ்டிக் காகிதத்தின் உதவியுடன் மின்சக்தியை சேமித்து வைக்கும் “பவர் பேப்பர் ” என்ற நுட்பத்தினை கண்டறிந்துள்ளனர்.பவர் பேப்பரின் சிறப்பம்சங்கள் 

பவர் பேப்பரில் புதுப்பிக்கத்தக்க செல்லுலோஸ் மற்றும் எளிதாக கிடைக்க பாலிமர் போன்றவைகள் அடங்கியுள்ளது.15சென்டிமீட்டர் விட்டம் மற்றும் ஒரு சில மில்லிமீட்டர் தடிமனையும் , மிக இலேசான எடையும் கொண்ட இந்த காகிதம் சந்தையில் தற்போது கிடைக்கும் மின்தேக்கிகளை விட பன்மடங்கு சிறந்ததது.

சந்தையில் காணப்படும் அதிநவீன மின்தேக்கிகளைப்(Super Capacitor ) போன்றே 1F சக்தியை தேக்கி வைக்கும் திறன் வாய்ந்தது. கூடவே நீர் புகாத யுக்தியையும் , எந்தவித பாதிப்பை விளைவிக்காத இரசாயன கலவைகளின்றி தயாரிக்கப்பட்டுள்ளது .பவர் பேப்பர் தற்போது நான்கு உலக சாதனையையும் நிகத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதே . இந்த சோதனையில் பவர் பேப்பர் வெற்றி கண்டால் எதிர்காலத்தில் அனைத்து இடங்களிலும் நாம் பவர் பேப்பரைக் காணும் சாத்தியமுண்டு .