வீரமுனை திருஞான சம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களினால் ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் திருஞான சம்பந்தர் குருபூசை தின விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
முன்னாள் அறநெறி பாடசாலை அதிபர் திரு.ரகுபதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருஞான சம்மந்தரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை சாத்திய பின்னர் அறநெறி பாடசாலை மாணவர்களினால் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆலய பிரதமகுரு நிமலேஸ்வரக் குருக்கள் அவர்களினால் விசேட பூசைகளும் நடத்தப்பட்டன.