நம்பிக்கை ஔி அமைப்பின் கல்வி செயல் திட்டத்தின் மல்வத்தை நிகழ்வு

“நம்பிக்கை ஒளி” அமைப்பின் தாயகம் நோக்கிய செயற்றிட்டத்தின்கீழ் அதன் அம்பாரை மாவட்டக் கிளையினால் சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மல்வத்தை விபுலாநந்தா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும்

தெரிவுசெய்யப்பட்ட பொருளாதாரத்தில் நலிவுற்ற மற்றும் பல்வேறு வகைகளிலும் பாதிப்புற்ற மாணவ மாணவியருக்கான 2016ம் வருடத்திற்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வானது பாடசாலை மண்டபத்தில் வித்தியாலய அதிபர் திருமதி. கௌசல்யா கணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக நம்பிக்கை ஒளி நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் திரு.கி.ஜெயசிறில், அம்பாரை மாவட்ட இணைப்பாளர் திரு.மு.ரமணீதரன், காரைதீவு பிரதேச இணைப்பாளர் திரு.கு.ஜெயராஜி நம்பிக்கை ஒளி அமைப்பின் அம்பாரை மாவட்ட முகமைத்துவ சபை உறுப்பினர்களான திரு. சிறிகாந்தன், திரு. ஜெயகாந்தன் மற்றும் காரைதீவுப் பிரதேச 2009ம் ஆண்டு உயர்தர மாணவர்கள் சமூகசேவை அமைப்பின் நிருவாக உறுப்பினர்கள் ஆகியோரும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 nam 1

nam 2

nam 2

nam 2

nam 2

 

அதிகம் வாசித்தவை