வீரமுனை சீர்பாததேவி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக அலிக்கம்பை மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள்

வீரமுனை சீர்பாத தேவி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ' வறுமையான மாணவர்களின் கல்விக்கு வலு ஊட்டுவோம்' எனும் திட்டத்தின் ஊடாக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

வீரமுனை சீர்பாத தேவி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக தர்ம சீலர்களின் அன்பளிப்பினால் திகோ/அலிகம்பே அ.த.க.பாடசாலையில் கல்வி கற்கும் தரம் 01 – 11 வரை உள்ள 260 மாணவர்களுக்கு 20.01.2017 அன்று 2017 ஆம் கல்வி ஆண்டிற்காக பாடசாலை பயிற்சி புத்தகங்கள் ரூபா 180,000.00 செலவில் அன்பளிப்பு செய்யப்பட்டது. இந் நிகழ்வில் இல்லத்தின் இஸ்தாபகப் பணிப்பாளர் பொறியியலாளர் தா.வினாயகமூர்த்தி, பாடசாலை அதிபர் எஸ்.மணிவண்ணன், இல்ல நிர்வாக உறுப்பினர்கள், இல்ல மேற்பார்வையாளர,; மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

alikambay 1

alikambay 1

alikambay 1

alikambay 1