வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் - 2016 கதவு திறத்தல்
வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்றைய தினம் (14.05.2016) இடம்பெற்ற கதவு திறத்தளுடன் இனிதே தொடங்கியது. கதவு திறத்தல் நிகழ்வானது உற்சவகால பிரதம குரு இரா.அரசரெட்ணம் ஐயா அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. வீரமுனை ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து அம்மனின் திருவுருவச் சிலை, கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கிரிகைகள் இடம்பெற்றது.